search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரவலாக மழை"

    • சுவர் இடிந்து கார், பைக் சேதம் ஒருவர் படுகாயம்
    • குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

    வேலூர்:

    வேலூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. எனினும் மாலை வேளை களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    நேற்று பகலில் 95.5 டிகிரி வெப்பம் பதிவானது. பிற்பகலில் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.

    இந்த நிலையில் மாலை 6.30 மணி அளவில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங் களில் மழைநீர் தேங்கியது.

    வேலூர் மக்கான் அம்பேத்கர் நகர் அருகே சாலையோரம் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சில நிறுவனங்களும், குடோன்களும் உள்ளன.

    இந்த நிலையில் இரவு 9.30 மணி அளவில் திடீரென கட்டிடத்தின் மேல் தளத்தின் நடைபாதை சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அதன் கீழே நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதமானது. இதில் அங்கிருந்த ஒருவருக்கு காலில்காயம் ஏற்பட்டது.

    இதேபோல் குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மழையின் காரணமாக இரவில் குளிர்ந்த காற்று வீசிய தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • அரக்கோணத்தில் பலத்த மழை
    • ஒரு மணி நேரம் போராடி உடலை மீட்டனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குருவரா ஜப்பேட்டை பள்ளிக்கூட மேட்டுத்தெரு பகுதியில் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. மனோகரன் அவரது தாய் அலமேலுடன் (89) வசித்து வந்தார். தொடர் மழை காரணமாக வீட்டின் மேற்கூரை (ஓட்டு வீடு) நள்ளிரவில் இடிந்து விழுந்தது. அலமேலு படுத்திருந்த கட்டிலின் மீது மேற்கூரை விழுந்ததில் அவர் இடிபாடுக்குள் சிக்கி இறந்தார்.

    இதுகுறித்து தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மூதாட்டி உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் ஒரு மணி நேரம் போராடி மூதாட்டி உடலை மீட்டனர். அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடலை அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×